சர்வதேச மட்டத்தில் இன்று எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர் வரும் பாராளுமன்ற தேர்தல் ஊடாக மக்கள் பதிலளிக்கவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வலஸ்முல்லவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெலிஅத்த தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் கூறியதாவது,

"ஒருமைப்பாட்டைக் கொண்ட மற்றும் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நாடு ஒன்றையே கடந்த 2005 ஆம் ஆண்டு என்னிடம் எதிர்பார்த்தீர்கள். அந்த வகையில் 30 வருட பயங்கரவாதத்தை குறுகிய காலத்துக்குள் முறியடிக்க எம்மால் முடிந்தது.

உலகின் பிரபல நாடுகளில் நிலவும் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாமல் அதிகாரமிக்க அந்த நாடுகள் இன்னும் போரிட்டு வருகின்றன. சில நாடுகள் பயன்படுத்திய ஆயுதங்கள் காரணமாக இன்றும்கூட பிறக்கும் குழந்தைகள் விகாரமாக பிறக்கின்றன.

எனினும் நாங்கள் சிவிலியன்களை பாதுகாத்த வண்ணமே இந்த மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டோம். ஆனால் இன்று எமக்கு சர்வதேச மட்டத்தில் பிரச்சினை வந்துள்ளது. இவற்றுக்கு எதிர்வரும் தேர்தலின்போது நாட்டு மக்கள் பதிலளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

நாங்கள் யுத்தத்தை செய்கின்ற நிலையிலேயே அபிவிருத்திக்கான பின்னணியை உருவாக்கினோம். சில பிரதேச சபை உறுப்பினர்கள் தங்கள் கிராமங்களை அபிவிருத்தி செய்ய 500 இலட்சங்களுக்கும் அதிகமாக செலவழித்துள்ளனர்.

நாங்கள் தேர்தல் குறித்து சிந்திக்காமல் அபிவிருத்தி தொடர்பான தீர்மானங்களை எடுத்தோம். எனவே எமது நேர்மையான தீர்மானங்கள் காரணமாக மக்கள் எம்முடன் இணைந்துகொண்டனர்.

எமது இந்த முயற்சிகளின்போது பலர் காலைவாரினர். ஆனால் நாங்கள் சவால்களை வெற்றிகொண்டோம். இன்று நாடளாவிய ரீதியில் அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. கொழும்பில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கிராம மக்களுக்கு சேவையாற்றக்கூடிய அரசியல்வாதிகளை நாங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கின்றோம்." எனத்தெரிவித்தார். 
 

 
  1. றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
  2. அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
  3. விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
  4. வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
  5. நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
  6. டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
  7. பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
  8. இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
  9. சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
  10. தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு
சுவிஸ் செய்திகள்
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

News image

தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு

News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch

 

 
ஆசிரியர் பக்கம்
News image

சிங்களத்தின் இனப்படுகொலை: சர்வதேசம் செய்தது என்ன?

திங்கள், 17 மே 2010

News image

மகிந்தவின் “தமிழ் அரசியல் தலைமை”யுடன் பேச்சுவார்த்தை எப்போது?

வியாளன், 22 எப்பிரல் 2010

News image

“நாடுகடந்த தமிழீழ அரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்கொண்டுள்ள சவால்”

திங்கள், 15 மார்ச் 2010

“என்ன செய்யப்போகின்றது கூட்டமைப்பு”

செவ்வாய், 8 டிசம்பர் 2009