
தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு
இந்திய - தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி குடும்பம் தயாரிக்கும் திரைப்படங்களை உலகத் தமிழர்கள் புறக்கணிக்குமாறு சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது.
வா.கி.குமார் 29 ஜூலை 2010

வன்னியில் இடம்பெறும் தாக்குதலின் பின்னணி என்ன?சரத் பொன்சேகா தரப்பிலிருந்து இருந்து கசியும் உண்மை
கடந்த வருடம் தடைமுகாமில் இருந்து தனியே பிரித்து எடுக்கப்பட்ட போராளிகளில் தீவிரமான விடுதலைப்புலிப் போராளிகளைபிரித்து (பெண் போராளிகள் உட்பட )தனி வதைமுகாமில் அடைத்து வைத்திருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே.
வா.கி.குமார் 28 ஜூலை 2010
கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை அபாரமாக ஆடி வருகிறது. ஷேவாக் அபாரமாக ஆடி சதம் போட்டார்.
125 ரன்களை கடந்து தொடர்ந்து ஆடிக் கொண்டிருக்கிறார்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 6 ரன் வித்தியாசத்தில் வென்று 1-0 என்ற என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
2வது மற்றும் கடைசி டெஸ்ட் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங் செய்தது.
தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய தென் ஆப்பிரிக்கா இந்திய பந்து வீச்சாளர்களின் திடீர் சூறாவளி காரணமாக நேற்றைய ஆட்ட நேரத்தின்போது 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது.
இன்று பேட்டிங்கை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணியினர், 85 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தனர்.
அல்விரோ பீட்டர்சன் சதமடித்தார். ஹஷிம் ஆம்லா 114 ரன்கள் சேர்த்தார். ஜாகீர்கான் 4 விக்கெட்டுகள் எடுத்து 90 ரன்கள் கொடுத்தார். ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுகளுக்கு 64 ரன்கள் கொடுத்தார்.
இதை த்தொடர்ந்து பேட்டிங் செய்ய இந்திய அணி களமிறங்கியது. துவக்கத்திலேயே, 9வது ஓவரில் கவுதம் கம்பீர் பீட்டர்சன் மூலம் ரன்அவுட் ஆனார். கம்பீர் 38 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதேபோல் முரளி விஜயும் 12வது ஓவரிலேயே மார்க்கேல் பந்தில் ஏபி டி வில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். முரளி 15 பந்துகளில் 7 ரன் மட்டுமே எடுத்தார்.
எனினும் முதலில் களமிறங்கிய ஷேவாக் அபாரமாக ஆடி அட்டகாசமான சதத்தைப் போட்டார். தொடர்ந்து ஆடி வரும் அவர், 47வது ஓவரில் 121 பந்துகளில் 128 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் 2 சிக்ஸர் மற்றும் 19 பவுண்டரிகள் அடங்கும்.
அதேபோல் சச்சின் டெண்டுல்கரும் அரை சதத்தைக் கடந்து விளையாடி வருகிறார். 112 பந்துகளில் 67 ரன்கள் (9 பவுண்டரி) எடுத்திருந்தார் சச்சின்.
இந்திய அணி 47வது ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 240 ரன் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)



.jpg)
