
வடமாகாணத்தைச் சிங்கள மாகாணமாக மாற்றி அங்கு இராணுவத்தினர் உட்பட அவர்களது குடும்பங்களுமாக சுமார் நான்கு இலட்சம் பேரை குடியேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக அரச காணிகள் மட்டுமின்றி தமிழர்களது காணிகளும் சுவீகரிக்கப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு நாம் அறிக்கை கொடுத்தும் எதுவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது தமிழ் மக்களுடனான புரிந்துணர்வுக்கு என்று கூறி நல்லிணக்கக் குழு ஒன்றை அமைத்துள்ளமை கேலிக்குரிய விடயம் ஆகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
இந்த விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன் கொழும்பு தமிழ் வார வெளியீடு ஒன்றுக்கு தெரிவித்துள்ளதாவது,
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவதாகவும் அதற்காகவே நல்லிணக்க குழுவொன்றினை அமைத்துள்ளதாகவும் கூறுகிறது. ஆனால், இன்றைய உண்மையான நிலைவரம் வேறாகவே உள்ளது.
இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற முடியாத வகையில் சிங்கள இராணுவத்துக்கான நிரந்தரக் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த மக்கள் இன்று நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் தங்களது வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கிலுள்ள பல தமிழ்க் கிராமங்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் இவ்வாறான மோசமான நிலையேற்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு விரிவான அறிக்கை கொடுத்தும் கூட எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
மாறாக இராணுவத் தளபதி சுதந்திரபுரத்தில் இராணுவத்துக்கான நிரந்தர குடியிருப்புகளைத் திறந்து வைத்துள்ளார். இராணுவத்தின் குடும்பங்கள் அங்கேயே தொடர்ந்து இருக்கலாமெனத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் உண்மையாகவே ஒரு புரிந்துணர்வை உருவாக்க விரும்பினால் அந்த மக்களை அவர்களது சுதந்திர நிலத்தில் குடியேற்ற வேண்டும். அதனைக் கூடச் செய்யவில்லை. ஆண்டாண்டு காலமாக அந்த மக்கள் வாழ்ந்த மண்ணுக்கு மீண்டும் போக முடியாது என்றால் புரிந்துணர்வு என்பதற்காள அர்த்தம் என்னவென்பதனை அரசாங்கமே புரிய வைக்க வேண்டும்.
அத்துடன் அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்குப் புரிந்துணர்வு, புரிந்துணர்வு என்று கூறிக் கொண்டு வடமாகாணத்தை சிங்கள மாகாணமாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறது.
இன்று வரை வடமாகாணத்தில் மட்டும் ஒரு இலட்சம் துருப்புகள் உள்ளன. வடமாகாணத்தின் சனத்தொகையே பத்து லட்சமாக இருக்கும்போது இவர்களுக்கும் நிரந்தர வதிவிடம் வழங்கப்படுமாயின் அவர்களின் குடும்பங்களையும் சேர்த்து ஆகக்குறைந்தது அது நான்கு இலட்சமாக அதிகரிக்கும்.
இவ்வாறானதொரு நிலையேற்படுமாயின் வடமாகாணத்தின் விகிதாசாரப் பரம்பல் நிச்சயமாக மாற்றமடையும். இவ்வாறானதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது.
இந்த அடிப்படையில்தான் இராணுவத்தினரையும் அவர்களது குடும்பங்களையும் அரசாங்கம் துரிதமாகக் குடியேற்றி வருகிறது.
அரசாங்கம் அரச காணிகளில் இராணுவத்தினரைக் குடியேற்றுவது என்பதற்கு அப்பாலும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களையும் பறித்தெடுக்கிறது. அது கண்டிக்கக் கூடிய விடயம் மாத்திரமல்ல.. பாரதூரமான விடயமும் கூட.
இந்த நிலையில் அரசாங்கம் கூறும் தமிழ் மக்களுடனான புரிந்துணர்வு என்ற விடயம் அர்த்தப்படுத்தப்பட வேண்டுமாயின் முதலில் இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவேண்டும்.
தென்னாபிரிக்காவில் முன்னர் உண்மையைக் கண்டறியும் குழுவொன்று அமைக்கப்பட்டது. ஆனால் குழு தென்னாபிரிக்காவின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டதன் பின்னரே உருவாக்கப்பட்டது.
இந்தக் குழுவின் முன்தோன்றி பலர் சாட்சியமளித்தனர். பலர் மன்னிக்கப்பட்டார்கள் பரஸ்பரம் புரிந்துணர்வும் நம்பிக்கையும் ஏற்பட்டது.
ஆனால், இங்குள்ள நிலைமை வேறு. யுத்தம் முடிவடைந்து நீண்ட காலமாகியும் அரசியல் தீர்வொன்றினைக் காண்பதற்காக இது வரை எந்த முன்னெடுப்புகளும் இல்லை. அரசியல் தீர்வு ஏற்படாமல் எப்படிப் புரிந்துணர்வு ஏற்படும்?
ஆகவே, அரசாங்கம் நியமித்துள்ள நல்லிணக்க குழுவானது அர்த்தமுள்ள விடயங்களைச் செய்யுமென்று எதிர்பார்க்க முடியாது. அரசாங்கம் இந்தக் குழு தொடர்பில் எந்தவித முன்னெடுப்புகளையும் இதுவரை செய்யவில்லை.
அரசாங்கம் தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வைக் காணாமல், மக்களை அவர்களது நிலங்களில் மீளக்குடியேற்றாமல் தடுத்து வைத்துக் கொண்டு ஒரு குழுவை நியமித்துள்ளது கேலிக்குரிய விடயமே.
மேலும், இலங்கையின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடுவதாகக் கூறி அரசாங்கம் பலத்த கண்டனத்தைத் தெரிவித் துள்ளது. அமைச்சரொருவரும் உண்ணாவிர தமிருந்தார்.
ஆனால், இன்று வரை தமிழ் மக்களை அரசாங்கம் தொடர்ந்தும் அடக்கு முறைக்குள் வைத்துக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் உலகம் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாதென்பது எந்த விதத்தில் சரியானதாகவிருக்கும்? உள்நாட்டுப் பிரச்சினையை அரசினால் தீர்க்க முடியாது உள்ளதன் காரணமாகவே சர்வதேசம் இன்று தலையிட்டுள்ளது. எனவும் அவர் தெரிவித்தார்.
- இலங்கையில் தமிழ் எழுத்தாளர் மாநாடு வேண்டாம் பேராசிரியர் க.சிவத்தம்பி
- "தமிழர்களின் தேவைகளை கவனிக்க"இலங்கைக்கு விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும் சாத்தியம்
- எதிர்வரும் 8ம் திகதி கருப்பு ஜூலை தினமாக பிரகடனப்படுத்த கோரிக்கை
- இன்று முதல் நிர்வாக மாற்றத்துடன் “முரசம்”; இணையத்தளம்.
- தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான விமானத்தின் பாகங்கள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு
![]() சுவிஸில் இலங்கையைச் சேர்ந்த 24 குடும்பங்களுக்கு பிரஜாவுரிமைசுவிஸில் இவ்வருடம் இலங்கைக் குடும்பங்களுக்கு 24 இற்கு பிரஜாவுரிமை கிடைத்துள்ளது. இப்பிரஜாவுரிமைக்கு 435 வெளிநாட்டுக் குடும்பங்கள் விண... Saturday, 4 September 2010 விரிவு... |
![]() சுவிட்சர்லாந்தின் தேசிய நாள்சுவிட்சர்லாந்து நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு. Sunday, 1 August 2010 விரிவு... |
![]() இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைதுசுவிட்சர்லாந்திலுள்ள இரத்தினக்கல் நிறுவனமொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இஸ்ரேலியர் ஒருவர் கைது ... Thursday, 29 July 2010 விரிவு... |
![]() ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதிசுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் அலியன்ஸ் சியூ பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ்,காலிஞதிச் சுற்றிற்குத் தகுதி ... Thursday, 29 July 2010 விரிவு... |
- + 1 |
![]() டோனி பிளேயர் மீது சப்பாத்து,முட்டை வீச்சுபிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. Saturday, 4 September 2010 விரிவு... |
![]() நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலிநியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். Saturday, 4 September 2010 விரிவு... |
இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்துஇங்கிலாந்தின் லெய்ஸ்டஷயர் பிராந்தியத்திலுள்ள ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் வெடிப்புச் சம்பவமொன்றுடன் பாரிய தீ பரவ ஆரம்பித்ததாக தீயணைப்புத் துறையினர் தெர... Saturday, 4 September 2010 விரிவு... |
![]() பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலிபாகிஸ்தானின் குவேட்டா நகரில் இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். Friday, 3 September 2010 விரிவு... |
- + 1 |
மணவைத்தம்பியின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் சென்னையில் இடம்பெற்றதுமறைந்த தமிழ் தலைவர் ஏ.எஸ்.மணவைத்தம்பியின் மூன்றாம் ஆண்டு நினைவுதினம் அண்மையில் தமிழ் நாட்டில் இடம்பெற்றது. Saturday, 4 September 2010 விரிவு... |
![]() இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்இந்திய இராணுவத் தளபதி வி.கே.சிங் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார். ஐந்து நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டே அவர் இலங்கை வரவுள்ளார். Friday, 3 September 2010 விரிவு... |
![]() சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்கொழும்பில் எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென்று தமிழ் எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் கோரிக்கை விட... Friday, 3 September 2010 விரிவு... |
![]() தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படைஇலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, கச்சத்தீவு கடல் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் விரட்டியடித்தனர்.... Thursday, 2 September 2010 விரிவு... |
- + 1 |
![]() இலங்கை அணி சம்பியன்தம்புள்ளையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 74 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. Sunday, 29 August 2010 விரிவு... |
![]() சூராஜ் ரந்திவ், சேவாக்கிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சூராஜ் ரந்திவ் இந்திய அணியின் ஆரம்ப வீரர் வீரேந்திர சேவாக்குக்கு நோ பால் வீசியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார். Tuesday, 17 August 2010 விரிவு... |
![]() முரளி இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் இலங்கைக் கிரிக்கெட்உலகில் அதிகளவு விக்கெட்டுகளைப் பெற்று வரலாற்று நாயகனாக விளங்கும் முத்தையா முரளிதரன் இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் புதிய கிரிக்கெட் சகாப்தத்திற்குள் இலங்கை நேற்று வெள்ளிக்கிழமை ... Saturday, 24 July 2010 விரிவு... |
![]() முரளிதரன் உலக சாதனை-முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்விகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தனது 800வது விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார் முத்தையா முரளிதரன். இப்போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை ... Thursday, 22 July 2010 விரிவு... |
- + 1 |





.jpg)





.jpg)




