முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தனது கடமையைத் தட்டிக் கழித்துள்ளது. இதுதொடர்பாக ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது தேவையற்றது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு இயற்றிய சட்டம் செல்லுமா? முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளதா? என்பன உள்பட பல அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய, சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் உத்தரவிட்டது.

ஆனால் இதில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை என்று திமுக சமீபத்தில் தீர்மானம் போட்டது. இதையடுத்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்திலும் இதே முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதை நிரூபிக்கும் வகையில், நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,

முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது. புதிய அணை கட்டத் தேவையில்லை. பழுது பார்த்தால் போதும். அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்றும், அவற்றுக்கு தேவையான ஏராளமான ஆதாரங்களையும் தமிழக அரசு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் வழங்கி உள்ளது.

ஏற்கனவே தாக்கல் செய்துள்ள இந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே சுப்ரீம் கோர்ட்டு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கலாம். ஆனால் சுப்ரீம் கோர்ட் தனது கடமையை தட்டி கழித்து விட்டு, புதிய நிபுணர் குழுவை நியமித்து உள்ளது.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பான பொறுப்பையும், அதிகாரத்தையும் சுப்ரீம் கோர்ட் தனி குழுவிடம் ஒப்படைத்தது ஏற்றுக் கொள்ள முடியாதது. முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய மீண்டும் ஒரு குழு தேவை இல்லை.

ஆகவே சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான இந்த நிபுணர் குழு தேவையற்றது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த குழுவை சுப்ரீம் கோர்ட் வாபஸ் பெற்று, வழக்கை சுப்ரீம் கோர்ட்டே தொடர்ந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 
  1. றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
  2. அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
  3. விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
  4. வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
  5. நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
  6. டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
  7. பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
  8. இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
  9. சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
  10. தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு
சுவிஸ் செய்திகள்
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

News image

தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு

News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch

 

 
ஆசிரியர் பக்கம்
News image

சிங்களத்தின் இனப்படுகொலை: சர்வதேசம் செய்தது என்ன?

திங்கள், 17 மே 2010

News image

மகிந்தவின் “தமிழ் அரசியல் தலைமை”யுடன் பேச்சுவார்த்தை எப்போது?

வியாளன், 22 எப்பிரல் 2010

News image

“நாடுகடந்த தமிழீழ அரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்கொண்டுள்ள சவால்”

திங்கள், 15 மார்ச் 2010

“என்ன செய்யப்போகின்றது கூட்டமைப்பு”

செவ்வாய், 8 டிசம்பர் 2009