நேற்று  22-02-2010 இந்தியப்  பாராளுமன்ற வரவு செலவுக் கூட்டத் தொடர் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையுடன் தொடங்கியது. 

பிரதிபா பாட்டீல் இந்தியில் நிகழ்த்திய அவரது உரையில் -

“இலங்கை அரசுடன் இந்திய அரசு தொடர்ந்து இணக்கமாகச் செயல்படும். மனித நேய அடிப்படையில் இலங்கைத் தமிழர்களின் மறு வாழ்வுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்யும். பாதிக்கப்பட்ட மக்களின் நெடுங்காள நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு ஆக்கபூர்வமான உதவிகளைத் தாராளமாக அளிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்

கிழக்காசியாவின் இருபெரும் பேட்டை ரொளடிகளில் ஒன்றான இந்தியாவை ஆளும் காங்கிரஸார் தான், இலங்கை ராணுவத்தைக் கொண்டு, கருணாநிதியின் சம்மதத்தோடும் ஒத்துழைப்போடும், தமிழினப் படுகொலையை நடத்திவிட்டு, இன்று மனித நேயத்தோடு தமிழ் மக்களுக்குத் தொடர்ந்து உதவிகள் செய்யப் போகிறோம் என்கிறார்கள்.

இலங்கை விடயத்தில் இன்று இந்தியாவை ஆளுவோர் இவ்வாறு போடுகின்ற இரட்டை வேடம் ஒன்றல்ல. இரண்டல்ல. பற்பல .

1)   ஈழத் தமிழர்களுக்கு உதவி. அதே நேரத்தில் இலங்கை அரசுடன் நட்பு

2)   ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு. அதே நேரத்தில் பொன்சேகா மீதும் கரிசனம்

3) தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு டெல்லியிலேயே அலுவலகம் அமைத்து கொடுத்து, தன் கண் பார்வையிலேயே வைத்துக் கொண்டு கண் போல் பார்த்துக் கொள்ளுதல்.  அதே நேரத்தில் தன் வளர்ப்புப் பிள்ளை வரதராஜப் பெருமாளுக்கு  தேசியப் பட்டியல் மூலம் எம்.பி பதவி மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியைப் பெற்று தருதல்.

ஆறரைக் கோடிச் சொந்தங்கள் நாம் அருகிலிருந்தும், இந்திய  உரலுக்கும் , இலங்கை  உலக்கைக்கும்   இடையில்  இடிபட்டுச் சாகிறதே நம் தொப்புள் கொடி உறவினம் ...  யாரிதற்கு காரணம் ?

தட்டிக்  கேட்க  வேண்டிய  தார்மீகப் பொறுப்புள்ள  தி.மு.க.வும் , அ.தி.மு.க.வும்  காங்கிரசுக் காரன்  காலை  நக்கிக்  குடிப்பது  நீயா? நானா? எனப்  போட்டியிடுகின்றன.

அந்தத் தி.மு.க.வையும் , அ.தி.மு.க.வையும்  நத்திப் பிழைப்பது நீயா? நானா?  என  தமிழீழ ஆதரவு கட்சிகள் என சொல்லிக்கொள்பவை  போட்டியிடுகின்றன.

தேர்தல் அரசியலைப்  புறக்கணிக்கும் தமிழீழ ஆதரவு  இயக்கத்  தலைவர்களோ  ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாய் அதிகமாய்ச்  சத்தம்  போடுவது  நீயா? நானா? என போட்டியிடுகின்றன.

தமிழ் நாட்டுத்  தலைவர்களின் துரோகத்தையும் , சந்தர்ப்ப வாதத்தையும் , ஒற்றுமையின்மையையும் , கையாளாகத் தனத்தையும் புரிந்துக்கொண்டதால்  தான்,  தன்னையே  எரித்துக்கொண்ட  மாவீரன் முத்துக்குமார்   தன்னுடைய மரணசாசனத்தில்  இப்படிக் குறிப்பிட்டான். 

தமிழீழ மக்களே  தாய்த் தமிழகம் உணர்வு பூர்வமாக உங்கள்  பக்கம்தான்  நிற்கிறது  வேறு ஏதாவது  செய்ய வேண்டும்  என்றும் விரும்புகிறது  ஆனால் என்ன செய்வது?  உங்களுக்கு அமைந்தது  போன்ற உன்னதத்  தலைவன் எங்களுக்கு இல்லையே! 

ஆம் உலகத்  தமிழினத்தின்  ஒப்பற்ற  தலைவன் ஆண்டுக்கு ஒரு  முறைதான் பேசுவார். ஆனால் உலகமோ ஆண்டு முழுதும்  அந்த  ஒப்பற்ற தலைவரைப்  பற்றியே  பேசிக் கொண்டிருக்கும்

ஆனால் தமிழ் நாட்டுத்  தலைவர்களோ ஆண்டு முழுவதும் பேசிக்கொண்டே  யிருகிறார்கள்.  அதனால் தான் ஆண்டு முழுவதும்  ஈழத்  தமிழர்களும் இங்குள்ள மீனவர்களும்  செத்துக்கொண்டே   இருக்கிறார்கள்! 
 

                                                                                                                         சீதையின் மைந்தன்
                                                                                                                       
ஆசிரியர்,கரிகாலன்
 

பின்னூட்டங்கள் (0)

Subscribe to this comment's feed

சிறிது | பெரிது

busy
 
சுவிஸ் செய்திகள்
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

News image

தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு

News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

உலகச் செய்திகள்
News image

டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்

News image

பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்

News image

பாகிஸ்தானில் 150 பேருடன் விமானம் வீழ்ந்து நொருங்கியது

இந்திய செய்திகள்
News image

அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை

News image

விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு

News image

நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா

நடிகை அசினுக்கு எதிராக பரபரப்பு சுவரொட்டி

முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch

 

 
ஆசிரியர் பக்கம்
News image

சிங்களத்தின் இனப்படுகொலை: சர்வதேசம் செய்தது என்ன?

திங்கள், 17 மே 2010

News image

மகிந்தவின் “தமிழ் அரசியல் தலைமை”யுடன் பேச்சுவார்த்தை எப்போது?

வியாளன், 22 எப்பிரல் 2010

News image

“நாடுகடந்த தமிழீழ அரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்கொண்டுள்ள சவால்”

திங்கள், 15 மார்ச் 2010

“என்ன செய்யப்போகின்றது கூட்டமைப்பு”

செவ்வாய், 8 டிசம்பர் 2009