முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்னர் நாம் தொடர்ந்து வலியுறுத்தியும் எல்லோரையும் கேட்டுக்கொண்டுமிருப்பது ஒன்றே ஒன்றை தான். இனியாவது ஒரே அணியில் எல்லோரும் ஒரு பொது உடன்பாட்டின் அடிப்படையின் இணைந்து கொண்டு அடுத்த கட்டம் பற்றிய கருத்து பரிமாற்றங்களுக்கு உங்களை இணைத்துக்கொள்ளுங்கள் என்பதே!

 விரிவு...

 

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் போர் இடம்பெற்ற வேளையில் உலகத் தமிழர் வதியும் அத்தனை நாடுகளிலும் நாசகார வேலைகளை உண்டுபண்ண இலங்கைத் தூதுவராலயங்கள் ஊடாக இராணுவ புலனாய்வாளர்கள் பல பிரயத்தனங்களை மேற்கொண்டனர்.  உலகத் தமிழர்கள் மிக எச்சரிக்கையாக இருந்தே வந்தனர்.  ஆனால் கடந்த ஆண்டு இடம்பெற்ற தற்கால இராணுவப் பின்னடைவுக்குப் பின்னர் இலங்கையின் புலனாய்வாளர்கள் தமிழர் மத்தியில் ஊடுருவி வெற்றியும் அடைந்துவிட்டார்கள்.  இது இப்படியே தொடருமேயானால் உலகத் தமிழர் பல பிரச்சனைகளை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்.

 விரிவு...

 
ஈழத் தமிழரை அழித்து மற்றும் பல லட்சம் மக்களை இன்றும் அகதி முகாம்களுக்குள்ளும் மற்றும் சித்திரைவதை முகாம்களுக்குள்ளும் வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தை மூலமாக சமாதானத்தையும் மற்றும் தமிழர் பக்கம் உள்ள நியாயமான அரசியல் கோரிக்கைகளை சிறிலங்கா அரசினால் எப்படி செயலாற்ற முடியும்?  இது தான் இன்று பலரிடம் எழும் கேள்வி.

 விரிவு...

 

தமிழ் நாட்டின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தனது தள்ளாடும் வயதிலும் சளைக்காது தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் உலகத் தமிழரின் பாதுகாப்புக்கும் மற்றும் இந்தியாவின் இறையாண்மைக்கும் மனிதநேய பண்புடன் போராடுகின்றார் என்று தான் ஒட்டு மொத்த திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் நம்புகின்றார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு சாவுமணி அடிப்பது போன்றுதான் அவரது செயல்பாடுகள் என்று அவர் பொது வாழ்க்கையில் ஈடுபட்டாரோ அன்றில் இருந்து இன்றுவரை இடம்பெற்று வருகின்றது. தமிழ்நாட்டு மக்களை நன்றாகவே ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகின்றார் கலைஞர்.

 விரிவு...

 
இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தம் ஓய்ந்திருந்தாலும் அதனைவிட பெரிய ஆபத்து சர்வதேச ரீதியில் இலங்கையை நோக்கிவந்துகொண்டிருப்பதாக அண்மையில் சர்வதேச ஊடகவியலாளர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டிருந்தபோது இலங்கை வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கவலை தெரிவித்திருந்தார்.

 விரிவு...

 
தேர்தலுக்கு மட்டுமே பொதுமக்களைச் சந்திப்பதும், தேர்தல் முடிந்த கையோடு வாக்காளர்களை மறந்துவிட்டு, மீண்டும் அடுத்த தேர்தலின் போது மாத்திரம் வாசலுக்கு வருகை தந்து மக்களைச் சந்திக்கும் பெரும்பாலான அரசியல்வாதிகளோடு ஒப்பிடும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வளவோ மேல் எனலாம்(?)

 விரிவு...

 
தமிழ் மக்கள் பெருமளவு எதிர்பார்ப்புடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்தார்கள்.  விடுதலைப் புலிகள் சிங்கள இராணுவத்திற்கு ஒரு படிப்பை வன்னி மண்ணில் நிகழ்த்தி தமிழ் மண்ணில் கால்பதித்த சிங்கள சிப்பாய்களை வன்னி மண்ணிற்குள் புதைப்பார்கள் ‘நம்ம பொடியன்கள்; என்று எண்ணியிருந்த மக்களுக்கு பேரடியாக இருந்த மாதம் தான் மே.  தமிழர் நிலத்தைக் கைப்பற்றிய இராணுவம் கொத்துக் கொத்தாக தமிழரை கொன்று குவித்தார்கள்.

 விரிவு...

 

ஒரு சிறந்த அரசியல்வாதி யார் தெரியுமா? 'தான் பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வேன் என்று மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கவேண்டும். பின்னர் ஆறு வருட முடிவில் அவ் வாக்குறுதிகளை தன்னால் ஏன் நிறைவேற்றமுடியாமல் போய்விட்டது என மக்களுக்கு விளக்கமளிக்கத் தெரியவேண்டும்"  எனவே  உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியவற்றை ஏன் நிறைவேற்றமுடியாமல் போய்விட்டது என்ற காரணங்களை இப்போதே தேட ஆரம்பியுங்கள். அப்போதுதான் 2016ம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் மக்கள்முன் வருவதற்கு இலகுவாக இருக்கும்.

 விரிவு...

 

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் என்றும் மறக்க முடியாதவர்களில் பகத் சிங் முக்கியமானவர். மகாத்மா காந்தியின் அஹிம்சை வழிப்போராட்டங்களில் சிறிது காலம் பயணப்பட்டு, நாட்டின் விடுதலைக்கு ஆயுத போராட்டமே சிறந்தது என்று தன்னுடைய 19 வயதில் தீர்மானித்து அதற்குள் தன்னை புகுத்திக்கொண்ட இளம் சிங்கம்.

 விரிவு...

 

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் (80 வயது) என்ன குற்றம் செய்தார் என்று கூறாமலே நடு இரவில் சென்னை வானூர்தி நிலையம் வந்தடைந்தவுடன் தரை இறங்கவிடாமலே திரும்பவும் மலேசியா நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள் இந்திய வல்லாதிக்க ஆட்சி.  இதற்கு துணை போய்விட்டார் தமிழ் நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி.  சென்னையில் நீங்கள் தரை இறங்குவதற்கு அனுமதியில்லை என்று கூறி விமானத்தை விட்டுக் கீழே இறங்குவதற்கு கூட பார்வதி அம்மாளை அனுமதிக்கவில்லை.

 விரிவு...

 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு வருகைதந்த பெரும்பான்மையின சகோதரர் பொடியப்பு பியசேன. இராணுவ தடுப்புக்காவலில் இருந்து பாராளுமன்றத்துக்கு வருகை தந்த ஜெனரல் சரத் சந்திரலால் பொன்சேகா. ஒரேயொரு தமிழ் பெண்மணியாக பாராளுமன்றத்துக்கு வருகை தந்த விஜயகலா மகேஸ்வரன். குறைந்த வயதில் பாராளுமன்றத்துக்கு தெரிவான நாமல் ராஜபக்ஷ.

 விரிவு...

 
மேலதிக செய்திகள்...

முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch